உள்ளம் மகிழுதய்யா!
உன் புகழ் விளங்குதய்யா.
கள்ளம் விலகுதய்யா-கந்தா
இல்லம் பழகுதய்யா.
தேடித் திருமகனை--பாலா
ஓடி வருவேனய்யா.
பாடி உன்னருளை--வேலா
நாடி வந்தேனய்யா.
இதயம் இருண்டதய்யா--கடம்பா
உதயம் பொருந்திடய்யா.
ஆசை அகற்றிடய்யா--குருபரா
பூசை ஒலித்திடய்யா..
தண்டம் கொண்டவன் நீ--ஞானப்
பழம் நீ தந்தவன் நீ.
தந்தைக்கு உபதேசம்--சுப்பையா
தந்திட்ட குருபரன் நீ
ஔவைத் தமிழ்க் கிழவி-- தமிழ்
செவ்வேள் சிறுவனிடம்
வாதிட்டு தோற்றிட்டாளோ!---செய்த
சோதனை வென்றிட்டாயோ!
குன்றங்கள் தோரும்--குமரா
குடி கொண்டாயோ!
மன்றங்கள் கண்டும்---அழகா
மழழலை செய்தாயோ!
உள்ளம் மகிழுதய்யா--சரவணா
உள்ளி உருகையிலே.
வள்ளி மணாளனே--மருகா
வெள்ளியன் மைந்தனே.
கூப்பிட்ட குரலுக்கு--சாமி
ஓடி வருவாயே!
கூவி அழைக்கின்றேன்--குகனே
தாவி வந்தருள்வாயே!
கவஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment