Monday, 13 October 2025

காலத்தின் கோலம்.

காலத்தின் கோலம்.

காலம் போறப் போக்கப் பார்த்தா
கணக்குப் புரியல.
கோலம் அதைப் படிச்சிப் பார்த்தா எனகுப் புரியல.
ஜன நாயக நாடகத்த ரசிக்க முடியல--இங்கே
பண நாயகர் தானே நம்ம ஆளு றானுங்க

எலக்ச னுன்னா ஓட்டுக் கேட்டு தேடி வாராங்க?
எலக்சனுல ஜெயிச்சப் பின்னே கலக்சன்
பன்றாங்க.
ஓட்டுக் கேட்டு வரும்போது கும்புடு றானுங்க----அப்புறம்
ஓட்ட வாங்கி ஜெயிச்சா  எங்கே அம்புடு றானுங்க.

தேர்தலுனு வரும்போது நடந்து வாராங்க
ஊர் ஊரா ஓட்ட வாங்கக்.கூடி வாராங்க
தேர்தலுக்கு அப்புறங்கார் சன்னல் மூடு றாங்க--பழசு
இறங்கி நடந்த கோலம் மறந்து பறந்து போறாங்க.

அஞ்சு வருஷம் முடிஞ்சதுன்னா  கெஞ்ச வருவாங்க 
செஞ்ச தென்ன சொன்ன தென்ன மறந்து போவாங்க.
மானங் கெட்டு மேடை யேறக் கூச மாட்டாங்க--எப்படி!
ஆனாலும் ஜெயிக் கிறாங்க ஏன்னும் புரியல.

உண்மையிலே ஓட்டுப் போட்டுச் ஜெயிப்ப தாருங்க?
நன்மை செய்ய மக்களுக்கு உழைப்ப தாருங்க?
விலை கொடுத்து ஓட்ட வாங்கி ஜெயிக் கிறானுங்க--அவங்க
தலையக் கண்டா கும்பிடனுமாம் உசந்து போனாங்க.

வீடுமேல வீடு காடுமேல காடு காருமேல காருன்னு
வேட்டை யாடிக் கூட்டி அள்ளிச்  சேர்க்கி றானுங்க.
ஓட்ட வித்தக் கூடடம் நாமம்  போட்டுக் குறாங்க--இது
கேடு கெட்ட ஜனநாயகக் கேலிக் கூத்துங்க.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.







No comments:

Post a Comment