அத்தை மவனே!
அத்தை மவனே அத்தானே--என்
ஆசை முகமே மச்சானே!
பித்து ஆனேன் உன்மேலே--என்
பிரியக் கண்ணா உன்னாலே!
மொத்த மனசும் சுமந்தேனே--என்ன
ஆளப் பிறந்த ராசாவே!
சொத்து சுகமும் நீதானே --கண்ணில்
சொக்க வச்ச சுந்தரனே!
நான் பிறக்கும் முன்னாலே--அழகா
நீ பிறந்தே இருந்தாலும்.
எனக் காகவே பிறந்தாயோ--நானும்
உனக் காகவே பிறந்தேனோ.
கண்ணே மணியே கரும்பேனு--என்னக்
கட்டி அணைச்சது போதுமே.
காலம் பூராம் வாழ்ந்தசுகம்--நான்
கண்ட கனவும் கண்டுட்டேனே.
நாம பெத்த பிள்ளைகளே--நாட்ல
நம்ம பேரே சொல்லோனும்.
சாமம் ஏமம் பாராம--யாருக்கும்
சேமஞ் செஞ்சே வாழோனும்
காலம் பூராம் வாழ்ந்தாலும்--கண்ட
கனவு அம்புட்டும் நிறஞ்சாலும்
வாழ்ந்து செத்து மடிஞ்சாலும்--மறுபடி
மீண்டும் மீண்டும் பிறக்கோனும்.
சேந்து நாம வாழோனும்
இன்னுஞ்
செத்தாக்கூட மோச்சந்தான்--உன்னோட
இருந்த இந்த நிமிஷந்தான்.
பிறந்தக் காரணம் அடைஞ்சிட்டேன்--நான்
பிறந்த காரணம் அடைஞ்சிட்டேன்--
உன்னோட
இருந்தும் சேந்தும் வாழ்ந்திட்டேன.
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment