வீரனேநீ எழுந்து வா!
வீரனேநீ எழுந்து வா!
வீட்டை விட்டு வெளியே வா!
போராளி நீயும் புலிபோல
புறப்படு வெளிப்படு புயல்போல.
வெட்டிப் பேச்சு வெறுங் கூச்சல்,
சுற்றுற கம்பும் அரட்டுற வீச்சில்,
வேட்டிய மடிச்சு வீரம் காட்டு
கத்திய கூட்டம் தூரம் ஓட்டு.
வழியை மறிக்கும் வெறிநாய் கூட்டம்
பழியை திணிக்கும் பாதை மாற்றும்.
பயணம் தொடரத் தடைகள் செய்யும்
பயந்து நின்றால் பரிகாசம் பண்ணும்.
நாய்கள் என்றால் அதுதான் குணம்
ஓடினால் துரத்தும் எதிர்த்தால் ஓடும்
நல்லதைத் தொடரப் பொல்லவை கெடுக்கும்
உள்ளது அதுதான் ஓய்ந்தால் தடுக்கும்..
மிருகங்கள் இனத்தை ஒலிகள் சொல்லும்.
அறிந்தும் விலக மனிதற்கு உதவும்.
மனிதற்கு மனிதர் குரல்கள் வேறு குணத்தைப் புரிந்து அறிந்தது யாரு
குனிந்து வளைந்தால் பணிவென ஏறும்.
துணிந்து நிமிர்ந்தால் தொட்டிடப் பதறும்.
ஓடி ஒளிந்தால் தேடி அலையும்.
ஊன்றி நின்றால் வேண்டி வணங்கும்.
தொட்டதை விட்டால் தொடர்வது கடினம்.
விட்டதைத் தொட்டாலும் வேறாகும் பயணம்.
முன்வைத்த காலை பின்வைக் காதே
உன்வசம் கூட்டம் பின்வரும் நிற்காதே.
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment