உள்ளம் என்பது கோவில்
உள்ளம் என்பது வீடாகும்---அதில்
உன்னைத் தேடு.கோவிலாகும்.
சிந்தை திறந்து பாடினால்—அன்பு
சிந்தும் ஒளியில் தேடலாம்.
இல்லை என்பதும் இருக்கின்றது.--அங்கே.
இருப்பதும் நீயே தெரிகின்றது.
இருண்ட உண்மை ஒளிர்கின்றது.—நெஞ்சம்
மருண்ட மாயை தெளிகின்றது.
கலையின் அம்சம் கோவிலது.--ஆசை
அலையும் நெஞ்சின் கூடலது.
தொலையும் பொய்மை நேர்வலங்கு---தொலைந்து
தொடரும் மெய்மை தேர்வலங்கு.
கலையாய் தன்னை இரசித்திடத்தான்.--மெய்மை
நிலையாய் உள்ளம் வசித்திடத்தான்.
அமைதி சொல்லும் சிலைகளிலே--நெஞ்சம்
அமையும் செம்மை படிக்கவைத்தான்.
அமைதி சொல்லும் சிலைகளிலே--நெஞ்சம்
அமையும் செம்மை படிக்கவைத்தான்.
சத்தியம் நிச்சயம் இத்தரையும்- காவலும்
சட்டமும் மன்றமும் உள்ளம்தான்.
சொல்லும் அறமும் விளக்கமும்-ஆலயம்
செல்லும் பழக்கம் துலக்கம்தான்.
கொ.பெ.பி.அய்யா.

No comments:
Post a Comment