Monday, 3 March 2014

வீரனாச்சி வாராடா.

வாராடா வீரனாச்சி.

வாராடா வாராடா வீரனாச்சி வாராடா.
வணங்காமுடி தமிழச்சி வரிச காட்டி வாராடா.
கயவர்களைக் காதறுக்க ஏகியவள் வாராடா..
நயவஞ்சகம் மீட்டெடுத்து நமைக்காக்க வாராடா..

பட்ட பகல் கொள்ளைகளை பட்டொழிக்க வாராடா.`
வெட்டவெளி வீதிக் கொலைத் தட்டிக்கேக்க வாராடா.
வன்கொடுமைக் கற்பழிப்பு இன்னல் நீக்க வாராடா.`
பெண்ணடிமைச் செய்வோரை பிச்செறிய வாராடா..

ஊழல்செய்யும் பேர்களை ஓட்டுதற்கு வாராடா.
கூலிப்படை நாய்களைக் காலிசெய்ய வாராடா.
பொய்யரசியற் பித்தர்களைப் புறம்போக்க வாராடா.
கையூட்டுக் கள்வர்களைக் களையெடுக்க வாராடா.

சுயநலக் கூட்டத்திற்குச் சூடு வைக்க வாராடா.
சுரண்டும் பேர்வழிகளுக்குக் கரண்டு வைக்க வாராடா.
பதுக்கும் கொள்ளைத் திருடர்களை ஒதுக்கி வைக்க வாராடா.
பணம் பறிக்கும் பாவிகளை இனம் பிரிக்க வாராடா.

காமவேட்டைக் கயவர்களைக் காவு கொள்ள வாராடா.
பாவச்செயல் இழியோரை எரித்தழிக்க வாராடா.
ஊதாரிக் கூட்டங்களை ஒழித்துக்கட்ட வாராடா.
நீதிவழி நியாயங்களை நிலை நாட்ட வாராடா.

ஈழத் தமிழ் மக்களுக்கு தோள்கொடுக்க வாராடா.
வீரம் போற்றும் வீரத்தாய் வாள்கொடுக்க வாராடா.
ஈனங்கொண்ட எதிரிகளை வேரறுக்க வாராடா.
மானங்காக்கும் தமிழினத்தை மகுடமேற்ற வாராடா..

எனக்கும் கூடத் தெரியாது எப்ப அவள் வாராடா?
கனக்கும் நம்ம  சுமை இறக்கக் கட்டாயம் வாராடா.
இனிக்கும் எந்தன் நினைவிலே கனவாக வாராடா.
கணக்கு அது நேராகும் காலம் அதில் வாராடா.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment