கள்வன் எவனோ!
என்
உள்ளம் கொள்ளை போனதோ!
அது
கள்ளன் வசம் ஆனதோ!
எந்தன்
சொல்லும் கேட்க மனதோ!
இங்கு
இல்லை இன்றும் எனதோ!!
அந்த
மாயம் செய்த கள்வன் எவனோ!
இதய
நேயம் கொய்த மாயன் அவனோ!
காதல்
தேயம் வென்ற வீரன் எவனோ!
அரண்
காயம் பூந்த சூரன் அவனோ!
நெஞ்சம்
உள்ளிருந்தே கள்ளம் செய்யுதோ!
அவன்
ஒற்றனாகி என்னை அறியுதோ!
என்னைக்
கள்ளியெனக் குற்றம் சொல்லுதோ!
காணக்
கள்ளன் பக்கம் தானா சாயுதோ!
அவனை
எண்ணநீ வேண்டாம் என்றால்
வேறு
எண்ணங்களை அழிக்கின்றதே!
நானும்
கண்கள்மூடி மறப்பேன் என்றால்
சிந்தை
கனவில் அவனை வரைகின்றதே!
இந்த
மனமென்ற மாயம் அதனை
பாவி
இனம் கண்ட தெப்படியோ!
மாய
மனவேட்டை ஆடியன்றோ
உள்ளச்
சிறுகூட்டை சிறையெடுத்தான்
கொ.பெ.பி.அய்யா.

No comments:
Post a Comment