Monday, 24 March 2014

தேடித் தொலைந்ந்தேன்.


இன்னும் விளங்கவில்லை


என்னத்த எழுதிக் கிழித்துவிட்டேன்.
சொன்னதி லென்ன முடித்துவிட்டேன்.
அற்புதம் எதைநான் நிகழ்த்திவிட்டேன்.
அறிய முயன்றும் தொலைந்துவிட்டேன்.


தேடித் தேடி தொலைகிறேன்.

தொலைந்து தேடி அலைகிறேன்.

கிடைக்கும் போதெனைப் படிக்கிறேன்

விடையின்றி மீண்டும் தொலைகிறேன்.


இன்னும் என்னை விளங்கவில்லை.

எண்ணும் ஏதோ துலங்கவில்லை.

என்னுள் கிடக்கும் குப்பையிலே

என்னை மட்டும் காணவில்லை.


பரத்திக் கலைத்துத் தேடுகிறேன்.

மறந்தது  கிடைத்து ஆடுகிறேன்.

தொலைத்தது நினைத்துக் கூடுகிறேன்

நினைத்தது தொலைத்து வாடுகிறேன்.


கண்டதும் சொன்னதும் அதுஇல்லை`

என்றதும் சிந்தை அடங்கவில்லை.

அண்டம் அனைத்தும் தேடுகிறேன்.

கொண்டதும் நிறுத்தவும் ஓடுகிறேன்.


சிந்தை பரந்து பறக்கிறது

முந்தை விரித்தும் திறக்கிறது.

விந்தை ஒளிந்து சிரிக்கிறது

விளங்கிடத் தேடென அழைக்கிறது.


கொ.பெ.பி.அய்யா.







.

 


No comments:

Post a Comment