Saturday, 15 March 2014

ஒற்றைப் படை.

ஒற்றைப்படை!!!

காதலை அவளும் தேர்ந்தாள்  ேர்ந்தால்ளும்  விழுந்தாள்
கனவில் கண்டும் நேர்ந்தாள்
நினைவில் கூடிக் கலந்தாள்
நித்திரை துறந்தும் எழுந்தாள்.

தெருவில் தேடும் கண்கள்
உருவில் அவனென ஏங்கல்.
உணர்வில் பசியினை மறந்தாள்
நினைவே உணவென மெலிந்தாள்`

உறவுகள் என்ன சொல்லும்
மரபுகள் என்னக் கொல்லும்.
மனத்தில் எல்லாம் கடந்தாள்
வனத்தில் தனியே கிடந்தாள்.

பிரிவைப் பலமாய்க் கொண்டாள்.
இரவைத் தினமும் கொன்றாள்.
தனிமைத் துயரெனக் கண்டாள்
தலைவனைத் தேடி நின்றாள்`

இதுதான் காதல் என்றாள்`
எதற்கும் துணிந்தே சென்றாள்.
பற்றிய காதல் பெண்டாள்
ஒற்றைப் படையாய் வென்றாள்.

கொ.பெ.பி.அய்யா.




No comments:

Post a Comment