ஒற்றைப்படை!!!
காதலை அவளும் தேர்ந்தாள்
கனவில் கண்டும் நேர்ந்தாள்
நினைவில் கூடிக் கலந்தாள்
நித்திரை துறந்தும் எழுந்தாள்.
தெருவில் தேடும் கண்கள்
உருவில் அவனென ஏங்கல்.
உணர்வில் பசியினை மறந்தாள்
நினைவே உணவென மெலிந்தாள்`
உறவுகள் என்ன சொல்லும்
மரபுகள் என்னக் கொல்லும்.
மனத்தில் எல்லாம் கடந்தாள்
வனத்தில் தனியே கிடந்தாள்.
பிரிவைப் பலமாய்க் கொண்டாள்.
இரவைத் தினமும் கொன்றாள்.
தனிமைத் துயரெனக் கண்டாள்
தலைவனைத் தேடி நின்றாள்`
இதுதான் காதல் என்றாள்`
எதற்கும் துணிந்தே சென்றாள்.
பற்றிய காதல் பெண்டாள்
ஒற்றைப் படையாய் வென்றாள்.
கொ.பெ.பி.அய்யா.

No comments:
Post a Comment