சந்தேகத் தீ
ஓடிப் போன தென்றலே நீ
தேடி வரும் நேரம் எப்போ?
ஊடிப் போன நிலவே நீ
கூடி வரும் காலம் எப்போ?
தேடி வரும் நேரம் எப்போ?
ஊடிப் போன நிலவே நீ
கூடி வரும் காலம் எப்போ?
வாடிப் போன பூவே நீ
சூடிக் கொள்ள சிரிப்ப தெப்போ?
மூடிப் போன குயிலே நீ
பாடிச் சேர திரும்ப லெப்போ?
சூடிக் கொள்ள சிரிப்ப தெப்போ?
மூடிப் போன குயிலே நீ
பாடிச் சேர திரும்ப லெப்போ?
சாடிப் போன வசந்தம் நீ
நாடி வந்து மலர்வ தெப்போ?
ஆடிப் போன பட்டம் நீ
கோடி நின்றேன் கையி லெப்போ?
பூத்த மலர் தோட்டமதை
காத்தாகி உதிர்த்து விட்டேன்.
காதல் சொன்ன நாட்டமதை
கருத்துப் பிழை செய்துவிட்டேன்.
நாடி வந்து மலர்வ தெப்போ?
ஆடிப் போன பட்டம் நீ
கோடி நின்றேன் கையி லெப்போ?
பூத்த மலர் தோட்டமதை
காத்தாகி உதிர்த்து விட்டேன்.
காதல் சொன்ன நாட்டமதை
கருத்துப் பிழை செய்துவிட்டேன்.
கூடி வந்த வசந்தம் அதை
கோடையாக்கி வறண்டுவிட்டேன்.
உயர்ந்து பறந்த பட்டமதை
கயறறுத்து அலையவிட்டேன்..
வீச வந்த தென்றலிடம்
பேசாமலே ஒட்டிவிட்டேன்.
நேச முள்ள வெண்ணிலவை
நீச முகில் மூடவிட்டேன்.
கோடையாக்கி வறண்டுவிட்டேன்.
உயர்ந்து பறந்த பட்டமதை
கயறறுத்து அலையவிட்டேன்..
வீச வந்த தென்றலிடம்
பேசாமலே ஒட்டிவிட்டேன்.
நேச முள்ள வெண்ணிலவை
நீச முகில் மூடவிட்டேன்.
சந்தேக தீயில் சுட்டேன்.
சுந்தரக் காதல் கெட்டேன்.
வெந்தேக வெய்யில் பட்டேன்.
அந்தியாகி உயிரும் விட்டேன்.
சுந்தரக் காதல் கெட்டேன்.
வெந்தேக வெய்யில் பட்டேன்.
அந்தியாகி உயிரும் விட்டேன்.
கொ.பெ.பி.அய்யா.

No comments:
Post a Comment