Saturday, 1 March 2014

தாய் சொல்

பாவக்கணக்கு.

நான் சொல்லியழுதிடாத சொந்தக் கதை கேளு
நான் எண்ணி உறங்கிடாத அந்தக் கதை கேளு-இங்க
சொந்தமென்ன பந்தமென்ன ஒண்ணுமில்லையே
என் தாயே தெய்வமே!—அவள்
சொன்னாள் கேட்கலயே!

அதை எழுத்தாலே சொல்லி அழுதா
அந்த எழுத்துக்கும் உயிர் வருமே!
ஒரு பாட்டாலே எழுதிப் படிச்சா
அந்தப் பாட்டுங்கூடி கதறி அழுமே!!
அந்தப் பாவம் மறக்க நான் பாட்டுப் படிக்க
எந்தப் பாவி மனசும் நொந்து துடிக்கும்.
இதைக் கேட்டுத் திருந்த ஒரு ஆளு இருந்தா
செஞ்ச பாவம் தீரும் எனக்கு.
தாய் சொல்லைத் தூக்கி எறிஞ்சேன்-ஐயோ
குடியாலே கெட்டு அழிஞ்சேன்

நான் ஆகாரம் இல்லாம அங்கே போற நேரம்`
நான் ஊரோடும் சேர உறவு ரொம்பத் தூரம்-என்.
உடம்பைகூடத் தூக்கிச் சுமக்க ஊக்கமில்லையே.
அப்போத் திமிரு கேளாது-இப்போ
அழுதாத் தீராது

தரையில நான் படுத்திருந்தா
தாய் மனசு கேளாது
தலையணயும் மறந்திருந்தா
தன்மடியத் தந்திடுவாள்.
உண்ணாமப் படுத்துவிட்டால்
ஊட்டிவிட்டு தூங்க வைப்பாள்.
இந்தப் பாவியால அந்தத் தாயுந்தான்
என்ன விட்டுந்தான்  போய் மறஞ்சாளே!
நான் தின்னாத பண்டமும் இல்ல
நான் பண்ணாத சேட்டையும் இல்ல
நான் போடாத சட்டையுமில்ல-பாவி
நான் ஆடாத ஆட்டமுமில்ல

சேற்றுத் தண்ணி
கிடக்க மெத்தை இருக்கு
நாற்றத் தண்ணி
குடிக்க நீரு எனக்கு.
பேரு தொலஞ்ச குடிகாரன் எனக்கு.
போகுந் தேரு ஏறவும் ஆச்சு கணக்கு.
நான் பாடுறேன் பாட்டு உனக்கு--சாமி
சாகுங் குடிதான் கேட்டு விலக்கு.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment