Tuesday, 18 March 2014

கடல் தாண்டிய காதல்.

கடல் தாண்டிய காதல்.

என் கண்ணே கண்ணே என் பொன்னே பொன்னே
உன்னைத் தந்தால் முத்தம் உயிரும் ஆறும் சித்தம்
என் கண்ணே கண்ணே என் பொன்னே பொன்னே
உன்னைத் தந்தால் முத்தம் உயிரும் ஆறும் சித்தம்

நிழலோடு கோர்த்து நெஞ்சோடு சேர்த்து
தழுவிடத்தான் மனம் தேடுதே!
நினைவதில் வாடுதே!
உன்னோடு பேசி உன் மார்பில் ஆற
என் எண்ணம் பசி ஆகுதே!
நாளும் அதுகூடுதே!  
தேன் கிண்ணம் நீயோ ததும்பலை நானோ
நானாடும்வித்தை தானேங்குதே!
நாளாகிப் போச்சு நானேங்கும் மூச்சு
வானேறும் காலம் தானோக்குதே!

என் கண்ணே கண்ணே என் பொன்னே பொன்னே
உன்னை தந்தால் முத்தம் உயிரும் ஆறும் சித்தம்
என் கண்ணே கண்ணே என் பொன்னே பொன்னே
உன்னை தந்தால் முத்தம் உயிரும் ஆறும் சித்தம்

ஆசைப் பொருள் வேண்டி மயக்கம்
அலைதாண்டிப் பறந்தேன்.
ஆனாலும் அங்கேதான் அலைந்தேனே!.
உயுருன்னை பிரிந்தும் உடலிங்கு துடிக்கும்!
உறவென்ன பாவமோ!
பொருளென்ன நீ போதுமே!

இந்த மண்மீதில் எது சொந்தம்!
காதல் போலாகுமோ!
அந்தப் பணமென்ன சுகமாகுமோ!!
உன் மடிதானே  சுவர்க்கம்.வேறென்ன 
மனமாறுமோ!  
உன்போலே துணையாகுமோ!

என் கண்ணே கண்ணே என் பொன்னே பொன்னே
உன்னை தந்தால் முத்தம் உயிரும் ஆறும் சித்தம்
என் கண்ணே கண்ணே என் பொன்னே பொன்னே
உன்னை தந்தால் முத்தம் உயிர் ஆறும் சித்தம்

நிழலோடு கோர்த்து நெஞ்சோடு சேர்த்து
தழுவிடத்தான் மனம் தேடுதே!
நினைவதில் வாடுதே!
உன்னோடு பேசி உன்னெஞ்சில் கூட
என்னெஞ்சம் தானேகுதே!
சொன்னாலும் வீணாகுதே!  

தேன் கிண்ணம் நீயோ ததும்பலை நானோ
நானாடும்வித்தை தானேங்குதே!
நாளாகிப் போச்சு நானேங்கும் மூச்சு

வானேறும் காலம் தானோக்குதே!

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment