Wednesday, 5 March 2014

கல்யாண மந்திரம்.

கல்யாணம்

மாங்கல்யம் தந்துனானேன மமஜீவன ஹேது நா
கண்டே பத்னாமி ஸுபகே  த்வம் ஜீவ சரதஸ் சதம்.

எத்தனையோ தடவை கேட்டிருக்கிறோம், அதன் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு ?

அர்த்தம்:--
மங்கலத்தின் மறு பெயர் கொண்ட மங்கலமான மணப்பெண்ணே, இந்த நொடியிலிரிந்து,  உன்னோடு துவங்கும் இல்லற வாழ்வு எனக்கு/நமக்கு மிக நல்ல முறையில் அமைய வேண்டும், நம் ஜீவனம் நன்றாக இருக்க எல்லாம் வல்ல இறைவினடம் மனதார வேண்டி இந்த புனிதமான திருமாங்கல்யச் சரடை உனக்கு அணிவிக்கிறேன். இந்த உலகே மெச்சும் நல்ல துணையாளாக, அணைத்து இன்ப, துன்பங்களிலும், சுக துக்கத்திலும் சரிசமமாக பங்கேற்று,  நூறு ஆண்டு காலம் மங்களமாக வாழ்வாயாக.  என்பதே இந்த மந்திரத்தின் பொருள். 

=============================================
இது இனி இருக்கட்டும் தமிழ் மந்திரமாக .
=============================================
மங்கலமே மணப்பெண்ணே 
திங்கள் முகப்பொன் குலமே!
எங்கள் மனை இன்றுமுதல் 
கொண்டாடும் சொந்தமே!
இயற்கையை சாட்சிவைத்து
இறைவனை அதிற் கண்டு
செயற்கை சுக துக்கங்களை 
சீராகப் பங்கேற்று
உலகமே நமை வாழ்த்த 
ஒழுங்கு மனை நாம் ஆண்டு
திலகத்தின் அழகாக 
தெய்வத்தின் துணையாக
நலமான வாழ்வதனை 
நாம் இணைந்து மேற்கொண்டு   
குலம்வாழ வாழ்வோமென 
கொடியிதனை சரடாக
புனிதமான உறவுக்கு
 புதுஉறவின் அழைப்பாக
இனிதான மனத்துடன் 
இசைவான தூய்மையுடன்
அணிவிக்கிறேன் வாழிநீ 
ஆயுளுக்கும் உன்னுடன்நான்
துணையாக்கி துணையிருப்பேன் 
தொடருவோம் சத்தியமே!

கொ.பெ.பி.அய்யா.


No comments:

Post a Comment