இருமுனை வலிகள்
காதலுக்கு மரியாதை
சாதலோ சமர்ப்பணம்!
காதலுக்கு வாழ்வதை
சாதிப்பதே அர்ப்பணம்
ஒருதலையாய் காதலிப்பதும்
மறுதலையை வாதிப்பதும்
புரிதலில்லா காதலதில்
நெறிபிறழ்வால் நேர்வென்ன?
இருமனமும் கூடினால்தான்
ஒருமனமாய் சங்கமம் .
சங்கமித்தால் காதலாகும்
பங்கமித்தால் மோதலாகும்.
.
சாதலோ சமர்ப்பணம்!
காதலுக்கு வாழ்வதை
சாதிப்பதே அர்ப்பணம்
ஒருதலையாய் காதலிப்பதும்
மறுதலையை வாதிப்பதும்
புரிதலில்லா காதலதில்
நெறிபிறழ்வால் நேர்வென்ன?
இருமனமும் கூடினால்தான்
ஒருமனமாய் சங்கமம் .
சங்கமித்தால் காதலாகும்
பங்கமித்தால் மோதலாகும்.
.
தந்தை தாய் காதலாலே
வந்த நானும் விபத்து தானே!
எந்த சொந்தம் அழைத்து வந்தேன்.
வந்த பின்னே வழி மறந்தேன்.
வேண்டாத விருந்தாளியோ
தூண்டாத விளக்கொளியோ!
ஆண்டாளின் காதலாச்சோ!
தீண்டாமல் சாதலாச்சோ!
கதை இனிக்கும் காதலது
சதமானால் கசக்கிறது.
விதை போடும் காதலிது
விளையாமல் மடிகிறது.
காதலென்ற பொருளுமென்ன?
பேதமான விதமுமென்ன?
ஆதிமுதல் இன்றுவரை
நாதியற்றுப் போனதென்ன?
காதலன்றி வாழ்வதென்ன?
காட்சிக்கது பாவமென்ன?
இயல்பாக விளைவதனால்
இழிவாகும் எண்ணந்தானோ!
கொ.பெ.பி.அய்யா.
.jpg)
No comments:
Post a Comment