Saturday, 29 March 2014

வெறுங் கூச்சல்.

வெறுங் கூச்சல்.

கருப்பு அயல் வங்கிகளில்
இருளில் ஏழை குடிசைகள்.
பாவம் ஜனநாயகம்.

புளிச்சேப்பம் பணக்காரனுக்கு.
பசியேப்பம் ஏழைக்கு.
சுதந்திரம் யாருக்கு?

பெட்டிப்பணம் தேர்தலில்
கொட்டுவது சீமான்கள்.
கூலிதான் ஏழைக்கு.

ஏழைக்கு ஏணி என்பான்
ஏறுவான் கொழுத்தவன்.
இதுதான் இந்தியா.

வரிச்சலுகை முதலாளிக்கு.
வாக்குவங்கி ஏழைக்கு.
வாக்கரிசி இலவசங்கள்..

வெறுங்கூச்சல் தேர்தலால்
வந்து நீ கிழிப்பதென்ன!
வெட்டிவேலை வேறென்ன!

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment