சனியும் சந்தேகமும்.
நல்லதொன்று நல்லதொன்று கேளேன்
நம்பிக்கைதான் நல்லதென்று வாழேன்.
உள்ளதொன்று உள்ளதொன்று கேளேன்
உண்மையென்ன கண்டு நீயும் வாழேன்.
வஞ்சமொன்று நஞ்சாக
நெஞ்சமதில் நெனச்ச்சிருந்து
கொஞ்சுமொழி பேச்சதில
அஞ்சாமல் பொய்கலந்து
பஞ்சிலே நெருப்பு வைப்பான்—அதில்
தன்குளிர் காய வைப்பான்.
சந்தேகம் பொல்லாதது—அது
சனிதோஷம் தீயானது.
சனியென்னும் பொறாமைகள்
சண்டாளப் பூச்சிகளாய்
இனிதான உன்வாழ்வை
இதயத்தில் தாங்காமல்
அரித்திடப் புகுந்தழிப்பார்—உன்
அமைதியையும் தான் குலைப்பார்
சந்தேகம் பொல்லாதது—அது
சனிதோஷம் தீயானது.
மத்தவங்க பேச்சையெல்லாம்
சுத்தமென்றும் நம்பாதே!
பற்றவைக்கும் வார்த்தைகளை
பாசமென்றும் எண்ணாதே!
அசைந்தால் ஆபத்துத்தான்—கை
பிசைந்தால் சந்தேகந்தான்.
சந்தேகம் பொல்லாதது—அது
சனிதோஷம் தீயானது.
நல்லதொன்று நல்லதொன்று கேளேன்
நம்பிக்கைதான் நல்லதென்று வாழேன்.
உள்ளதொன்று உள்ளதொன்று கேளேன்
உண்மையென்ன கண்டு நீயும் வாழேன்.
கொ.பெ.பி.அய்யா.
நல்லதொன்று நல்லதொன்று கேளேன்
நம்பிக்கைதான் நல்லதென்று வாழேன்.
உள்ளதொன்று உள்ளதொன்று கேளேன்
உண்மையென்ன கண்டு நீயும் வாழேன்.
வஞ்சமொன்று நஞ்சாக
நெஞ்சமதில் நெனச்ச்சிருந்து
கொஞ்சுமொழி பேச்சதில
அஞ்சாமல் பொய்கலந்து
பஞ்சிலே நெருப்பு வைப்பான்—அதில்
தன்குளிர் காய வைப்பான்.
சந்தேகம் பொல்லாதது—அது
சனிதோஷம் தீயானது.
சனியென்னும் பொறாமைகள்
சண்டாளப் பூச்சிகளாய்
இனிதான உன்வாழ்வை
இதயத்தில் தாங்காமல்
அரித்திடப் புகுந்தழிப்பார்—உன்
அமைதியையும் தான் குலைப்பார்
சந்தேகம் பொல்லாதது—அது
சனிதோஷம் தீயானது.
மத்தவங்க பேச்சையெல்லாம்
சுத்தமென்றும் நம்பாதே!
பற்றவைக்கும் வார்த்தைகளை
பாசமென்றும் எண்ணாதே!
அசைந்தால் ஆபத்துத்தான்—கை
பிசைந்தால் சந்தேகந்தான்.
சந்தேகம் பொல்லாதது—அது
சனிதோஷம் தீயானது.
நல்லதொன்று நல்லதொன்று கேளேன்
நம்பிக்கைதான் நல்லதென்று வாழேன்.
உள்ளதொன்று உள்ளதொன்று கேளேன்
உண்மையென்ன கண்டு நீயும் வாழேன்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment