Wednesday, 26 March 2014

பசலை.


வளையல்கள் என்னதான் சொல்லுது?
கழன்றுதானே கைநழுவி வீழுது.
நிலையிலென்ன அய்யய்யோ மாறுது!
நெடுமூச்சு தான்வாங்கி சோருது..
மெலிந்துடல் உள்வாங்கி கரையுது.
நலிந்துயிர் தான்மங்கி குறையுது..
குழிந்துவிழி பின்வாங்கி கருக்குது.
வழிந்துதுளி கண்நீங்கி உருக்குது.
இடைவிலகி உடைவழுகி மறுகுது
சடைகலைய பறந்துகுழல் அலையுது.
சிலைசிதைய எழிலிலகல தழலாகுது..
முலைபுதைய முகில்பதற அழலேறுது.
கடல்பொங்கி கண்வழியே தானோடுது
உடல்மங்கி குறியொடுங்கி தான்மூடுது.
கிடைகிடந்து நடைதளர்ந்து தள்ளாடுது.
விடைதொடர்ந்து விதிநினைந்து உயிராடுது.
கதவிருந்தும் காத்திருந்து கண்விழிக்கிறாள்.
சதமென்றும் கொண்டவனை கண்வைக்கிறாள்.
இதம்பழகிப் போனவனை இதயமென்கிறாள்.
பதமாகத் தானுருகிப் பசலையாகிறாள்.
கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment