Thursday, 13 March 2014

மனிதன் ஒரு புதிர்

குறியிலா படைப்பு.

நதியே நில்லு ஏன்தான் ஓடுகிறாய்?
குயிலே சொல்லு ஏன்தான் பாடுகிறாய்?
விதியே என்று வீண்தான் வாழுவது.

யாருக்கு யாரும் நேரொன்றும் இல்லை
பேருக்கு  வாழும் சீரொன்றும் இல்லை.
ஆளுக்கு ஆளும் மாறொன்றும் இல்லை.

அடித்தாலும் அணைத்தாலும் அழியாது குணமே.
படித்தாலும் தடித்தாலும் பழகாது மனமே.
பயிலாது முயலாது நயவாது தனமே..

கல்வியும் ஒன்றது கருத்துக்குத் விரிவு.
சொல்லிலும் உண்டது சுயத்திற்கு அறிவு.
கல்லிலும் கண்டது கலையது அழகு.

தன்னிலை கடந்தால் பன்னிலை தெளிவு.
ஒன்னிலை உழன்றால் என்னிலை விடிவு?
முன்னிலை முயன்றால் நன்னிலை அடைவு.

நாயெனப் பிறவி நன்றியை மதிக்கும்..
தாயென உறவு தன்பசி மறக்கும்.
நரியெனப் பிழைப்பு தந்திரம் எண்ணும்.

பாயும் புலிகண்டும் உயிருக்கு ஓடலாம்.
மாயன் கலிவென்றும் நேயம் தேடலாம்.
பொய்யன் மனிதனிடம் என்னென்று தப்பலாம்?

உள்ளம் ஒளிப்பதை உதடுகள் சொல்லுமா?
எண்ணம் இருப்பதை இதயமும் காட்டுமா?
சொல்லில் வருவதை சுயமென நம்பவா?

புரியாத புதிரொன்றும் புவியினில்  இருக்குமா?
அறிந்திட விளங்காத அதிசயம் பிறக்குமா?
குறியிட மனிதனை இறைவனும் இயலுமா?

கொ.பெ.பி.அய்யா.




No comments:

Post a Comment