முத்துக் குவியலாய் பனிமலைகள்,
மெத்தக் கொடைகளாய் அரணிலைகள்;
கத்தும் கடலலைகள் மிரட்டவே:
கெத்துப் பரதப்படை அணிவகுப்பே!
எதிரி யெவருண்டோ எதிர்க்கவே!
பதறும் பலங்கொண்டோம் உலகிலே.
ஓருயிர் இந்தியர் ஒருங்கிணைவே!
பாரினில் நின்றதார் அருஞ்சிறப்பே!
மொழி பல்லாயிரம் ஒரு குரலே!
இனம் எல்லாமே ஒரு குலமே!
மதங் கொள்ளாத மதமறங்கள்:
விதஞ் சொல்லாத இந்தியமே!
நதிகள் பாயுங் கடைமடைகள்,
விதிகள் மேவும் பொதுவுடைமை;
பசுமை இந்தியா நடைமுறைகள்:
வலிமை என்பதே படைநிரைகள்.
ஆலைகள் நிறம்பும் பாரதம்.
வேலைகள் வழங்கும் பாரிடம்.
ஆயுதம் வேறுண்டோ வெல்லவே!
ஆனதில் மாறுண்டோ வல்லரசே!
கொ.பெ.பி அய்யா.
No comments:
Post a Comment