காலைப் பொழுது.
சின்னஞ் சிறு பொழுது,,
சேவல் கூவி எழுப்புகிறது.
கண்ணங் கருமை கரைகிறது,
கதிரவன் வரவு வளர்கிறது.
ஊதல் காற்று இதமாக,
உலாவும் கீற்று இசையாக,
குயில்கள் பாட்டும் இரசமாக
மயில்கள் ஆட்டம் வசமாக..
நனைந்தும் பனியில் மலர்களோ
நடுங்கும் இரவுடன் கலந்ததோ!
மெல்ல இருளின் போர்வையோ
கள்ளம் விலகிக் கலையுதோ!
திங்களாய் மங்களப் பூவையர்,
மஞ்ள் பூசி நீராடி
ஞாயிறு வாசல் வரவேற்போ!
பாயிரங் கோல அணிவகுப்போ!
ஆழ்ந்த களைப்பு உறக்கம்தான்.
ஆதவன் விழித்துச் சிவந்தெழுந்தான்.
வாழ்த்தும் புல்லினம் குலவையிட:
வாழ்வின் ஆதாரம் வளர்கின்றான்..
கொ.பெ..பி.அய்யா.
No comments:
Post a Comment