பயம் எதற்கு கொரோனாவுக்கு!
வயப் படுவோம் நாம் நமக்கு.
புதிய பாதை தேடுவோம்.
முகக் கவசம் சூடூவோம்.
விலகி உள்ளம் பழகுவோம்.
வணங்கிக் கூப்பி அளவுவோம்.
இடை வெளிகள் விலகுவோம்
தொடுங் கைகள் கழுவுவோம்.
வெளியில் பயணம் சிக்கனம்.
குளியல் உடனே அக்கணம்.
ஆடை நாளும் துவைத்திடுவோம்.
கூடும் கூட்டம் தவிர்த்திடுவோம்.
வாயும் மூக்கும் மூடவே!
தூய கவசம் அணிவதே!
சூடிய கவசம் மூடியே,
மீறும் இருமல் விடுகவே!
வாங்கும் பொருளில் கிரிமிகள்,
தூங்கும் இரகசியம் அறிந்திடணும்;
வெய்யில் வெளியில் சிலமணிகள்:
வெய்யக் கழுவியே புழங்கிடணும்.
அரசு மருத்துவ விதிமுறைகள்,
அறிந்து நடக்கும் செயல்முறைகள்.
எமனாம் கொரோனா ஒழிந்திடுமே!
நமக்கு நாமே மருந்தாமே!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment