பாரென்ற ஊரொன்று உலகமே!
ஊரென்ற பேரொன்று பாரதமே!
குலமென்ற இனமொன்று மனிதமே!
இயலென்ற இறையொன்று சம்மதமே!
மதமெனும் சொல்லே சம்மதமே!
பொதுவெனும் நெறியே நம்மதமே!
கீதை பைபில் குர்ரா னெல்லாம்
போதனை வாழ்வியல் ஒரு சொல்லாம்.
வேளாங் கண்ணி கிருபை மாதா,
நாகூர் நாயகம் கருணை தர்கா;
கன்னியா குமரி பகவதி உதயம்:
சன்மார்க்கம் துலக்கும் சங்கம இதயம்.
இந்து முசுலீம் கிறித்துவரும்,
சொந்தம் உறவில் ஒருகுடும்பம்.
நிறத்தால் சொல்லும் சாதியில்லை:
பிறப்பால் இந்தியர் பேதமில்லை.
நீதிகள் பழக்கும் திருமறைகள்,
வேதங்கள் விளக்கும் பொதுமறைகள்.
ஒற்றுமை அடையாளம் இந்தியம்:
பற்றிய நெறிமுறை உலகியம்.
ஒருநிலம் ஓருகுலம் ஓரினமே!
பெருமை துலங்கிடும் பாரதமே!
உலகம் ஒன்றியம் ஓரரசு
துலங்கட்டும் இந்தியப் பேரரசு.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment