Friday, 3 July 2020

உன்னுயிர் நாங்கள்.

எம்மை நீ தூங்க வைக்க,
உன்னை நீ காவல் வைத்தாய்.
நம்பிக்கை உன் நிழலே--எமது
நிம்மதிக்கு ஆறுதலோ!

பனிமலை மீதில் நீ,
பகலிரவு எண்ணாமல்;
எம்முயிரை உன்னுயிராய்:
எண்ணி நீ காவல் செய்தாய்.

தாயாக விழித்திருந்து,
தவமாக தனித்திருந்து;
உன்னுயிரை பணயம் வைத்து:
மன்னுயிரை வாழ வைத்தாய்.

இந்தியாவே குடும்பம் என
சந்ததிக்கு சாட்சி யானாய்.
உன்னுயிரே எம்முயிரே
இன்னுயிராய் உயிர்க்கிறதே!

எம்மில் நீ வாழ்கிறது,
இதயம் சொல்லி துடிக்கிறது.
நூறு முப்பது கோடியுயிர்:
சேரத் தப்பாது பேடியுயிர்.

தாயை பழிப்பவன்,
நாயினுங் கீழாவான்.
தாய்நாடு காப்பவன்
சேயெனும் தாயாவான்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment