விவசாய விவசாயி!
விழித்துணர்ந்த யோகமோ!
விவசாயம் வாழவே,
விவசாயி முதல்வரே,
அவசரம் அவசியமோ!
வாடிய பயிர்கண்டு,
வாடிடும் கருணையே,
தேடிய வழிகண்டும்;
பாட்டாளி முதல்வரே:
மீட்டினார் காவேரி.
நாடெல்லாம் நீர்நிலைகள்,
நதிபெருக்கும் பேரணைகள்,
காடெல்லாம் கழனிகள்;
கண்ணிறைந்த பசுமைகள்:
கண்டதும் தமிழகமே!
வீணாகும் வெள்ளநீர்,
தானாக செல்லும்சீர்,
ஊனப்பட்ட நதிவழிகள்;
ஆழப்பட தூரெடுத்த:
சோழனவர் பழனிச்சாமி.
விவசாய மண்டலம்,
நவதானியக் களஞ்சியம்,
பாதுகாத்த விவசாயி,
சாதித்தமிழ் முதல்வராம்
சாதித்த பழனிச்சாமி.
தொடரட்டும் தமிழாட்சி,
படரட்டும் வள(ம்)மாட்சி,
கடரட்டும் சனித்தனம்;
இடரட்டும் திரியோகணம்:
விடிந்தது விடியலே!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment