கவிதை ஒன்று எழுதினேன்...
காட்டிக் காட்டி மொழிகிறேன்.
கருத் தென்ன சொல்வரோ!
கூட்டில் என்னைக் கொள்வரோ!
வடிக்கும் அற்புதச் சிலையோ!
செதுக்கும் சிற்பக் கலையோ!
கைகளில் வளர்ந்த அழகோ!
பொய்களில் மலர்ந்த கவிதையோ!
கருத்தைத் தேடுவனல்ல அறிஞன்.
கருத்தை விதைப்பவன் கவிஞன்"
உருவாக்கப் படுவனல்ல ஞானி:
பிறப்பால் கவிஞனும் விஞ்ஞானி.
கருத்து வடிக்கப்படுவது பாட்டு,
பாட்டு செதுக்கப்படுவது கவிதை.
பொருளும் இசையும் அழகு,
எட்டும் இலக்கியம் பழகு!.
சிலையோ கலையோ சிற்பமோ!
இலக்கின் நயமோ கற்பனையோ!
இரசனை அனுபவப் பொருளோடு:
உரையாடுங் கவிதை உயிரோடு.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment