பழிப்பதும் இழிப்பதும் எதற்கு?
அதனா லென்ன முறுக்கு!
பழிக்கவும் இழிக்கவு முன்னே
படித்ததும் தெளிந்ததும் என்னே!
தமிழின் விளக்கம் முருகன்.
தமிழின் அழகின் அருகன்.
அமுதத் தமிழின் ருசியும்--அவனை
அறிந்தால் அடங்கும் பசியும்.
கவசம் என்பது காப்பு,
அவசியம் சொன்னது கோப்பு.
துவேசம் இதிலென்ன நோக்கு--மாசு
ஆபாசம் திரித்தலை நீக்கு.
இலக்கியம் தமிழின் சொத்து.
சிலாக்கியம் தமிழினப் பற்று.
அருகதை எவர்க்குப் பழிக்க--இல்லை
விடுகதை இதுவோ அழிக்க!
அவரவர் உணர்வு அவர்க்கு.
எவரெவர் உரிமை தகர்க்க?
அருத்தம் தெளிந்தால் பழகு--மெய்மை
பொருத்தம் முறிந்தால் விலகு!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment