நம்பினால் நம்புங்கள்!
என்னாலிது முடியுமென
எண்ணித் துணிந்தும்--பின்
என்னதான் நேருமென
பின்னித் தயங்காதும்,
முன்னேற முயல்வதும்;
நம்பிக்கை.
அன்னாளில் எவரோ
சொன்னாரென்றே-ஐயோ
தன்னில் நம்பாது
முன் முயலஞ்சியும்,
பின்தங்கி மயங்குவதும்;
பேதமை..
இறைவன் என்பவன்
இருப்பானோ!--அவன்
இருந்தால் என்னைப்
பொறுப்பானோ வென,
இருவேறு ஐயமும்,
தெளியாமை.
.
இதிலெது சரியென்று
வாதிட முனைந்து-அதன்
பதிலுக்குப் பதிலாய்
சாட்சிகள் புனைந்தும்,
தீர்வதும் தானாம்,
அறிவாகும்..
எவரெவர்க்கு சரியது
எதெது மதித்து --அதை
அவரவர்க்கு உரியது
அதுவென சகித்தும்,
இயல்வாய் வாழ்வதும்,
நன்மையாம்.
கொ.பெ.பி.அய்யா
No comments:
Post a Comment