Saturday, 25 July 2020

வருவாரா மாட்டாரா!


வருவாரா மாட்டாரா--நன்மை
வரவேற்பது நம்பாடு.
தருவாரா பெறுவாரா--அவசரம்
தமிழர்நம் நிலைப்பாடு.

ஆட்சிதான் மாற்றமா--இன்று
அதுவல்ல அவசரம்.
அரசியலின் மாற்றமே--அறிவு
புரிந்தவரின் தரிசனம்.

இரஜினி என்ற நல்லவர்--மாற்று
கஜினி அல்ல சொல்லவர்.
இது தருணம் ஒன்றுதான்--மறு
முறைக் கல்ல என்பதாம்.

காந்திமகான் போலத்தான்--தூய்மை
ஏந்தியரசு ஆளத்தான்.
கட்சிக்கவர் தலைவர்தான்--தமிழ்
ஆட்சிக்கொரு இளைஞர்தான்.

காமராஜர் எம்.ஜி.ஆர்--பாமரர்
சேமங் காக்க ஆண்டனர்.
நாமறிந்த நல்லவரில்--இந்நாள்
நேயம் இரஜினி போலயார்?

இரசிக னென்ற பேரோடு--தலைவன்
இரசனைக் கென்ன புகழோடு!
அதிசயம் நிகழட்டும்--இரஜினி
எழுச்சி உன்னில் விழிக்கட்டும்.

உன்னில் விழிக்கும் எழுச்சியே--தமிழ்
மண்ணில் செழிக்கும் புரட்சியே!
தயாரானார் இரஜினியே--தமிழ்
தாயார்க்கவர் இரட்சனே!

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment