Tuesday, 4 August 2020

கண்துயில் மல்லிகையே!

உறங்கவோ!நெருங்கவோ!

என்முகம் நான் தொடவே;
என்கரங்கள் அஞ்சுதே!
உன்னை ஏன் தழுவேனோ!
கண்துயில் மல்லிகையே!

கட்டில் ஒன்று இரண்டாகி,
தொட்டில் சென்று பரணேறி;
விளக்கொளி காவலிலே:
விழித்தேங்கல் ஆனதோ!

கல்யாணம் ஆகி யென்ன!
பள்ளியறை போயு மென்ன!
கொரோனா சொல்லுமோ!
உறங்கவோ நெருங்கவோ!

கொ.பெ.பி. அய்யா

No comments:

Post a Comment