Saturday, 10 October 2015

ஆச்சிக்கு அஞ்சலி.

ஆச்சிக்கு அஞ்சலி.

வருவதும் போவதும்
வாடிக்கைதான் என்றாலும்
வரலாறு ஆவதுதான்
பிறந்ததன் அடையாளம்.

வாழ்ந்ததன் பதிவுகள்
தேர்ந்ததன் புகழொன்றில்
ஆச்சியெனும் உச்சத்தில்
பேச்சானார் வரலாறாய்.

தாங்காத வேடமில்லை
தாங்க வேடம் மிச்சமில்லை.
தாங்க ஒன்னா திரையுலகம்
தாங்கல் சொர்கம் படைத்ததோ!

கின்னஸ் சாதனைதான்
தான்னார்வ நூதனம்தான்.
பத்மஸ்ரீ பட்டம் தானும்
நித்தியத்தின் பேர் வாழும்.

மனோரமா என்றாலே
மனோரம்யம் கொண்டாடும்.
உடல் மறைந்து நீர்ந்தாலும்
தடம் கரைந்து தீராதே!

உழைத்தவர் களைத்திருப்பார்.
அழைத்தவன் படைத்தவனே!
விதைத்தவர் விளைந்திருப்பார்.
முளைத்தவர் பிறந்திருப்பார்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment