வாழ்ந்து வாழ்க!
நிறை வாழ்வாக வாழ்க வளமுடன்.
கடனின்றிக் காலமும் உடனுறை நேயமும்
திடன்பொறைத் திண்ணமும் எண்ணமும்
கொடை செய் பேராய் வாழ்க.!
அன்பின்பண்பும் நன்றின் நன்றும்
உண்மை உறவும் உகந்த வரவும்
பண்மை அறிவும் பகர்ந்து வாழ்க!
பசியறப் போக்கி பரிவது ஊக்கி
வசிக்கும் மனிதம் வாழும் புனிதம்
வாழ்வாய் வாழ்ந்து வையம் வாழ்க!
குணமெனும் குன்றாய் மனமெனும் ஒன்றாய்
தனமெனும் நன்றாய் இனமது பொன்றா
மனிதம் நின்று வாழ்வாங்கு வாழ்க!
கவஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment