பழைய காலப் பெருமை
கோலம் மாறிப்போச்சா?
கருத்து மாறி எல்லாம் கெட்டு
கணக்கும் மாறிப்போச்சு.
அந்தக் காலம் இந்தக் காலம்
எந்தக் காலம் எது வாழும்?
அந்த மனுசன் இந்த மனுசன்
எந்த மனுசன் அது போலும்?
ஓடி ஓடி உழைச்சாலும்
கூடி வாழ்ந்த காலம் வாழும்
பிழைப்புக்கான உழைப்பிப்போ
பேச்சுப் பழக்கம் போயேபோச்சு.
கருவிகளே உறவாச்சு
கலந்து பேசல் மறந்தாசசு.
இரவு விளையாட்டு எல்லாம்
மறந்து தொலைஞ்சும் போச்சு.
தெருக்கூடிப் பொழுது போக்கும்
சிரிப்புழகு ஒழியல் ஆச்சு.
பெருசுகளின் கேலிகிண்டல்
அருமை மறைஞ்சும் போச்சு?
குமரிகளின் குதுகலம்
கோலாட்டம் கொண்டாட்டம்
பந்தாட்டம் பல்லாங் குழியாட்டம்
எங்கேதான் போனதோ என்னதான் ஆனதோ!
சில்லாங் குச்சி கோலி யாட்டம்
கிளித்தட்டு தவிட்டு விளையாட்டும்
எல்லாம் ஒழிஞ்சு போச்சோ!
சொல்லும் அழிஞ்சு ஆச்சோ!
முக்குக்கொரு இளவட்டக் கல்
முறைக்கு மொரு சாதனைக்கல்
கக்கம் இடுக்கி பக்கம் வீசும்
காளைவீரம் காலமாச்சோ!
இரவுவெகு நேரம்வரை அன்று
அரவம் கொண்ட ஊர் இன்று
அவரவர் வீட்டுக்குள்ளே
அடங்கிப் போச்சோ TVக்குள்ளே!
பழைய காலப் பெருமை பேசும்
வழமை வாழ அருமை யாகும்.
படரட்டும் பழமைக் கனவாம்.
தொடரட்டும் நிசநினைவாம்.
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment