Monday, 15 September 2025

இன்னல் கண்டு சன்னலை மூடாதே.

சிரித்தாலே போதும்.

துன்பம் வரும்போது நிமிர்ந்துநீ சிரிச்சுக்கோ!
இன்பம் தொடரும் அதைநீ நினைச்சிக்கோ!
சன்னல் வழியே வந்து போகும் இன்னலைநீ!
கண்டும் சிரித்தும் கலங்காதே சிரிநீ!

இன்னல் கண்டு சன்னல் மூடாது.
பின்னல் கொண்டு இன்னல் விடாது.
புன்னகை வென்று துன்பந் தொடாது.
என்ன ஒன்றும் பின்னும் படாது.

தனிமை தவிர்த்து உறவு கலந்தால்
அடிமைசெய் ஆசை அறவே தொலைந்தால்
இனிமை இன்பம் என்றும் தொடரும்.
விடியல் வாழ்க்கை அடையாது ஒளிரும்.

மனதில் உறுதி கலங்காத் துணிவால்,
துணையென அதுவே எதிர்கொளும் வலிவால்,
துன்பம் தானே தோற்று ஓடும்.
இன்பம் அதுவாய் பாட்டுப் பாடும்.

துன்பம் கண்டு தொய்யாது நிமிர்வாய்.
இன்பம் வந்து பொய்யாது அமர்வாய்.
செல்வம் செழித்து வளமே கொழிக்கும்.
தெய்வம் களித்து நலமே அளிக்கும்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

No comments:

Post a Comment