Friday, 12 September 2025

வானவில்

வானவில்.

வானவில் தானவள் நாணலின் கோணலவள்.
நானவள் அழகிலே காணுவது
நாணலவள்
ஏனவள் இத்தனை வண்ணங்கள் 
மாயங்கள் 
ஆனதை வியக்கிறேன் அதிசயம் அற்புதம்.

ஏழுவித வண்ணங்கள் ஆளுவதன் வண்ணங்கள்
கலவையவள் அழகாக கலையவள்  வடிவமாக
சிலையோ சித்திரமோ மயங்குமென் எண்ணங்கள் 
நிலையிழந்து நிற்கிறேன் நிமிர்வாளோ அமர்வாளோ!

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

No comments:

Post a Comment