Sunday, 28 September 2025

பணம் என்னடா பணம்!

பணம் என்னடா பணம்!

பணம் என்னடா பணம்!
குணம் தானடா தனம்.
வெறும் பணத்தில் ஏதடா!
பெறும் நிம்மதி தானடா.

இருக்கும் வரையும் அன்புதான்.
பெருக்கும் நிறைக்கும் இன்பந்தான்.
செல்வம் வேறு என்னடா!. 
செல்லும் போது கொண்டுடா.

உயிரை உயிராய் மதியடா!
பயிரை அதுபோல் பாரடா!
பிறவும் தம்போல் நினையடா!
உறவென எல்லாம் அணையடா!

உலகம் என்பது விசாலம்.
பழகும் மனிதமும் விரியலாம்.
கலகம் எதற்கெனப் புரியலாம்.
அழகும் அதுவென அறியலாம்.

நிலையென எதுவும் ஏதடா!
மலையென அதுவும் யாதடா!
வந்தது போல போவதே!
வாழ்ந்தது சும்மா ஆவதே!

பிறந்தது ஏனெனப் புரிந்ததா"
இறப்பது தானென அறிந்ததா"
இருக்கும் வரையும் மகிழ்ந்திரு.
இருப்பதும் இறைத்து நெகிழ்ந்திரு.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.



No comments:

Post a Comment