அம்மா அம்மதான்.
அவளைத் தாண்டி ஆலயமும் இல்லை.
கருவறைத் தந்த கருணைத் தெய்வம்,
காலடி தொழுதாள் போதும் உய்வோம்.
தானே உணவாகி என்னை வளர்த்தாள்.
தன்பசி எண்ணத் தானே மறந்தாள்.
என்னைப் பசியறியச் செய்யாதவள்.
கண்ணில் கண்ட கடவுள் தானவள்.
தந்தை கண்டு முந்தானை விரித்தவள்.
என்னைக் கண்டு உயிரைப் புரிந்தவள்.
என்முகம் கண்டு தன்வலி மறந்தவள்.
என்னக் கண்டும் என்னை மறப்பாள்?.
தந்தையாரோ தன்துணை எண்ணுவார்.
என்னையவர் உயர்த்திடப் பேணுவார்.
தந்தை என்னைக் கைகளில் தேடுவார்.
அன்னை தானென் வயிறுடன் பேசுவாள்
கண்டித்துத் திருத்தும் உண்மை நட்பு.
அஞ்சி மனையாள் ஆர்ப்பரிப்பாள் தப்பு.
தண்டித்து வருத்தும் தந்தை அக்கறை.
கண்ணில் கரைப்பாள் தாயென் தவறை.
எந்த உறவுகளும் பிரிந்து போகலாம். .
சொந்தம் பந்தம துறந்தும் ஏகலாம்.
தநதை இழந்தும் தாயப்பாசம் வாழலாம்
தாயை மறந்து என்னதான் ஆளலாம்.
எத்தனை தேடல்கள் நான் தேடினாலும்
எத்தனை வசதிகள் நான் கூடினாலும்
அத்தனை சுகங்களில் நித்திரை வருமா?
முந்தானைத் தாய்மடி மணமது தருமா?
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment