Thursday, 4 September 2025

கற்பு எனனடா கடைச்சரக்கா!

கற்பும் பொது உடைமை.

கற்பு என்னடா கடைச் சரக்கா!
சொற்பேதம் கண்டு சோதனை செய்ய.
தற்குறிதானடா தரங்கெட்டுப் பிறழ்வான்.
சொற்குறி வாதம் சுயமதி மறுப்பான்.

பெண்ணின் பிறப்பிற்கு அற்புதம் உய்த்தாள்.
தன்னின் கற்ப்புக்கு சொற்பதம் செய்தாள்.
பெண்ணின் பொறுமை மண்ணின் பெருமை.
விண்ணின் திருமை பெண்ணின் மகிமை.

பூமி பிளந்தவள் சாமி ஆனாள்.
பொறுமை அளவை காமிக்க லானாள்.
அடிமை உறவை முடித்திடத் துணிந்தாள்.
பெருமைப் பிறப்பென சீதை அணிந்தாள்.

ஒருசார் கற்பு உரிமைக் கொடுமை.
இருசார் கற்பே பொதுமை உடைமை.
பாரதி சொன்ன சொற்பதம் உண்மை.
நேரதன் திண்மை கற்பதன் செம்மை..

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

No comments:

Post a Comment