.
என்ன கொண்டு வந்தோம்
என்ன கொண்டு போவோம்.
வந்ததும் போவதும் பிரயாணம்--இங்கு
வாழ்ந்தது எல்லாம் கனவாகும.
எல்லாம் வேண்டி அலைந்தோம்.
எதுதான் நிரந்தரம் கொண்டோம்.
வாழ்ந்த வரையே இலாபம்--அவனால்
வந்தது முடிந்தால் பயணம்.
உயிரும் சொந்தம் இல்லை.
உடலும் நமது இல்லை.
கடனாகப் பெற்றது எல்லாம்--கணக்கு முடியுங் காலஞ் சொல்லும்
உலகை விட்டு ஒருநாள்
உயிரும் பறந்து போகும்.
சொத்தும் பணமும் யாருக்கும--சொந்தம்
எத்தனை நாள்தான் எவருக்கும்.
வாழும் வரைதான் சும்மா
வாடகை போலத்தான் எல்லாம்.
ஆளும் அரசன் ஆனாலும்--உடலில்
ஆவி போனபின் பிணமாம்.
உண்ணவும் உடுத்தவும் போதும்
எண்ணும் ஆசை தீதாம்.
கொடுத்து மகிழ்ந்து வாழும்--உயர்ந்த
குணந்தான் மனிதம் ஆகும்.
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment