இயற்கையே போற்றி!
ஒளியாய் ஒலியாய் நீராய் நெருப்பாய்!
வளியாய் வெளியாய் வானாய் மீனாய்!\
இரவாய் பகலாய் முடிவாய் முதலாய்!
வரவாய் செலவாய் வகையாய் தகையாய்!
இயற்கை நீயே இறையே போற்றி!
மழையாய் வெயிலாய் தொடராய் தோற்றமாய்!
மலையாய் மண்ணாய் விதையாய் விளைவாய்!
முலையாய் பாலாய் மூலமாய் தூலமாய்!
நிலையாய் நிழலாய் நிறைவாய் காலமாய்!
இயற்கை நீயே இறையே போற்றி!
மலராய் மணமாய் மகத்துவப் பொருளாய்!
வளராய் வளமாய் நலமாய் அருளாய் !
குலமாய் குணமாய் களமாய் கருவாய்!
பலமாய் பகிர்வாய் பரிவாய் வரமாய்!
இயற்கை நீயே இறையே போற்றி!
மொழியாய் இசையாய் எழுத்தாய் இலக்காய்!
களியாய் கலையாய் வழியாய் வாழ்வாய்!
ஊனாய் உயிராய் உணர்வாய் நினைவாய்!
காணாய் கனவாய் கருத்தாய் நிகழ்வாய்!
இயற்கை நீயே இறையே போற்றி!
தூணாய் துணையாய் பூணாய் காப்பாய்!
மாணாய் கோனாய் தானாய் தீர்ப்பாய்!
தாயாய் அணைவாய் சேயாய் உலகாய்!
நீயாய் படைத்தாய் நீயே கொடைத்தாய்
இயற்கை நீயே இறையே போற்றி!
கொ.பெ.பி.அய்யா.
ஒளியாய் ஒலியாய் நீராய் நெருப்பாய்!
வளியாய் வெளியாய் வானாய் மீனாய்!\
இரவாய் பகலாய் முடிவாய் முதலாய்!
வரவாய் செலவாய் வகையாய் தகையாய்!
இயற்கை நீயே இறையே போற்றி!
மழையாய் வெயிலாய் தொடராய் தோற்றமாய்!
மலையாய் மண்ணாய் விதையாய் விளைவாய்!
முலையாய் பாலாய் மூலமாய் தூலமாய்!
நிலையாய் நிழலாய் நிறைவாய் காலமாய்!
இயற்கை நீயே இறையே போற்றி!
மலராய் மணமாய் மகத்துவப் பொருளாய்!
வளராய் வளமாய் நலமாய் அருளாய் !
குலமாய் குணமாய் களமாய் கருவாய்!
பலமாய் பகிர்வாய் பரிவாய் வரமாய்!
இயற்கை நீயே இறையே போற்றி!
மொழியாய் இசையாய் எழுத்தாய் இலக்காய்!
களியாய் கலையாய் வழியாய் வாழ்வாய்!
ஊனாய் உயிராய் உணர்வாய் நினைவாய்!
காணாய் கனவாய் கருத்தாய் நிகழ்வாய்!
இயற்கை நீயே இறையே போற்றி!
தூணாய் துணையாய் பூணாய் காப்பாய்!
மாணாய் கோனாய் தானாய் தீர்ப்பாய்!
தாயாய் அணைவாய் சேயாய் உலகாய்!
நீயாய் படைத்தாய் நீயே கொடைத்தாய்
இயற்கை நீயே இறையே போற்றி!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment