Thursday, 23 January 2014

முரண்படா முரண்கள்.

முரண்படா முரண்கள் !!

சொல்லி விடு சொல்லி விடு 
சொல்லிவிட்டால் கள்ளம் இல்லே!
சொன்னால் கெடும் நல்லதானால்
சொல்ல வேண்டாம் தவறு இல்லே!

பொய்யும் கூட நன்மையானால்
மெய் ஒளித்தால் தப்பு இல்லே!
மெய் உரைத்தால் கெடும் என்றால்
பொய் மறைக்கத் தேவை இல்லே!

வறுமை விட்டு ஒழியுமானால் 
கறுப்பு மீட்டல் களவுமில்லே!
சிறுமை கெட்டு அழியுமானால் 
சிறைப்பட்டாலும் பழியுமில்லே!

சத்தியமும்  செய்திடலாம்.
சமரசம்வாழப் பாவமில்லே!
பத்தியமும் முறித்திடலாம்.
சத்தியங்காக்க மோசம் இல்லே! 

நூறுயிர்கள் வாழுமானால்
ஓருயிர் இழப்புமில்லே!
உரிமை அதில் உய்யுமானால்
பெருமை செத்தால் குற்றமில்லே!

கொலைக்கு கொலை தீர்வானால்
கொண்டாட மனிதமில்லே!
விலையில்லா உயிர் பறிக்கும்
வேட்டைக்கிங்கு உரிமையில்லே!

யுத்தங்கண்டு மாண்டாலும் 
போற்றலாம் தோல்வியில்லே!
இறுதி வரையும்  போராடி 
இழந்த கற்பும் களங்கமில்லே!

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment