Monday, 6 January 2014

என்ன சொல்லத் துடிக்கிறாள்.

என்ன சொல்லத் துடிக்கிறாள்..

என்ன சொல்லத் துடிக்கிறாள்..
இதயம் துள்ள ஒடிக்கிறாள்..
ஆனாலும் தான் நடிக்கிறாள்
அவள் என்னைப் படிக்கிறாள்.

சிரிப்பில் என்ன சொல்கிறாள்.
சிந்தைக்குள் மெல்கிறாள்
மரத்தைக் கட்டிக் கொள்கிறாள்.
கரத்தைப் பற்ற மொழிகிறாள்.

தாவணியை விரிக்கிறாள்`
தானுனக்கு என்கிறாள்.
பாவாடைக்குள் காற்றழைத்து
பாவி என்னை உசுப்புகிறாள்.

இழுத்து இழுத்து மூடுகிறாள்.
எல்லாம் உனக்கு என்கிறாள்.
பழுத்த கனிப் பருவம்தான்
பழகத்தான் அழைக்கிறாள்.

கண்கள் சொல்லும் காதலை
கடை ஒதுக்கிக் காட்டுகிறாள்.
பெண்கள் வெல்லும் வித்தையை
பேசாமலே செய்கிறாள்.

கொ.பேபி.அய்யா.

No comments:

Post a Comment