தாய் சொன்ன மொழி!
எந்த நிலம் பிறந்தாலும்
அந்த மொழி கலந்தாலும்.
அன்னை தந்த மொழிதானே
எண்ணம் உண்ட தமிழ்தானே!
பாலோடு ஊற ஊட்டி
சோறோடு கூறிக் காட்டி
நீரோடு நினைவில் ஏற்றி
வேரான தமிழே போற்றி.
சொந்தம் நின்று உயிரிலே
முந்தும் சிந்தை பயில்விலே
உந்தும் ஒன்று வழக்கிலே
பந்தம் நின்று தமிழிலே!
இடையில் வந்த உறவெலாம்
கடையில் பெற்ற பொருளாமாம்
கருவின் மூல உணர்விலே
கரைந்த மூச்சு தமிழிழே!
முதல் மொழிந்த சொல்லொன்று.
முழு உலகின் அம்மான்று!
தரணிக் கெல்லாம் தாயென்று
தமிழ் சொல்லாம் வேருண்டு.
வாய் பேசும் மொழியெலாம்
தாய் வாசம் மொழியாமோ!
மண்ணில் விழும் உயிரெல்லாம்
தன்னில் எழும் தமிழன்றோ!
அம்மா எனும் சொல்லறியா
ஆருண்டு மொழி தெரியா?
ஆன்மாவில் உதிக்கும் விளி
தான்நாவில் பதிக்கும் தமிழ்.
பிழைப்புக்காக இடம் தேறி
பேசுவதும் தாய் மொழியோ!
பிழையாகத் தடம் மாறி
பூசுவதும் தமிழ் மொழியோ!
காற்றுள்ள இடம் எங்கும்
கன்னித் தமிழ் வாழ்ந்திருக்கும்.
வேற்றுவர் முட்டும் போதும்
வீரம் காட்டி வென்றிருக்கும்
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment