Saturday, 25 January 2014

பாவம் அந்தத் தொழிலாளி....சிறுகதை

பாவம் அந்தத் தொழிலாளி.....
(சிறுகதை)

சிகை அலங்கார நிலையம் ஒன்றிற்கு சிகை அலங்காரம்செய்து கொள்ளச் 
சென்றிருந்தேன்.எனக்கு முன்பாக ஒருவர் அலங்காரம் முடிந்து இறங்கினார்.
அலங்கார வேலை செய்தவர்க்கு அறுபது ரூபாய் கூலி கொடுக்கவேண்டுமே.]
பணம் எடுப்பதற்காக வேக வேகமாக அவசரக் கோலத்தில் தன் சட்டைப் பைக்குள்
ஆழம் உள்ளவரை விரல்களை விட்டுத் தேடினார.விரல்களென்ன வித்தையா 
பயின்றுள்ளத இல்லாத ஒன்றை இருப்பதாக்க் காட்டுவதற்கு!

எதுவுமே கிடைக்க வில்லை.விரல்கள் மட்டும் மூச்சுத்திணறிவெளியே பிழைத்து 
வந்தன.அப்பறம் அழகாகச் சொன்னார்.
"ஐய்யய்யோ சட்டையை மாற்றிப்போட்டு வந்து விட்டேனே........
இப்படித்தாங்க அடிக்கடி அவசரத்தில் எதையாவதுஎடுத்துக் கோர்த்துக்கிட்டு
வநதிடுறேன்.வர வர ஞாபக மறதியும் சாஸ்தியாயிருச்சி.எவ்வளவு அசிங்கமாப்
போச்சுபாருங்க.தயவு செய்து தப்பா நினைக்காதீஙக.இதோஐந்து நிமிடத்தில்
வந்து விடுகிறேன்" என்று அன்று பறந்தவர்தான்
இன்று  வரைக்கும்ம் வரவே இல்லையாம்..ஹூம்.............ஏமாற்றும் வித்தைகளைச்
செய்வதற்குஎப்படியெல்லாம் பிட்டப் போடுறாங்க பாருங்க..

பாவம் அந்தத் தொழிலாளி!"பரவாயில்லங்க வீட்டுக்குப்போய்ட்டு வாங்க"என்று 
கூறி நம்பி வழி அனுப்பி வைத்தவர் இன்னும் எத்தனை நாட்கள்தான்
எதிர் பார்த்துக் கொண்டிருப்பார்!


கொ.பெ.பி.அய்யா.




No comments:

Post a Comment