Saturday, 22 March 2025

நித்தம் மாறும் மாற்றம்

நித்தம் நித்தம் இளமை மாறும்

நித்தம் நித்தம் மாறும் மாற்றம் எத்தனையோ!
நெஞ்சில் நினைப்ப தெல்லாம்நிலைப்பதுதான் எத்தனையோ

கணக்குப் போட்டு வாழும் மனிதர் எத்தனையோ!
கொண்ட கடமையிலே வாழ்பவர்கள் எத்தனயோ!
நித்தம் நித்தம் மாறும் மாற்றம் எத்தனையோ!
நெஞ்சில் நினைப்ப தெல்லாம்
நிலைப்பதுதான் எத்தனையோ!

நரை விழுந்த செவியின் ஓரம் வயது சொன்னது
வயதில் பாதி முடியம் போது
வலுவிழந்தது.
தனது உயிர் தானிருக்கப் பிள்ளை வந்தது.
கண்டு அங்கும் இங்கும் இன்றி 
ஒன்று மயங்குகின்றது.
நித்தம் நித்தம் மாறும் மாற்றம் எத்தனையோ!
நெஞ்சில் நினைப்ப தெல்லாம்நிலைப்பதுதான 
எத்தனையோ!

மனது துள்ளி எழுந்து நின்று தானே முயன்றது.
வயது கிள்ளி மெல்லே தள்ளி 
சும்மா என்றது.
முதுமை என்னும் முடியாமை முனுமுனுத்தது
ஆடுபுலி ஆட்டம் எல்லாம் அடக்கம் என்றது.
நித்தம் நித்தம் மாறும் மாற்றம் எத்தனையோ!
நெஞ்சில் நினைப்ப தெல்லாம் நிலைப்பதுதான் எத்தனையோ!

தனிமரமாய் தளர்ந்த ஒன்று தரையில் விழுந்தது.
அதன் துணைக்கு வந்த துணை உலுத்து சாய்ந்தது.
தனிமரமாய் தளர்ந்த ஒன்று தரையில் விழுந்தது.
அதன் துணைக்கு வந்த துணை உலுத்து சாய்ந்தது.

இளமைத் திமிர் என்ப தெல்லாம் நிரந்தர மில்லை.
தனக்கும் வரும் முதுமையென உணர்வது மில்லை.
தனக்கும் வரும் முதுமையென உணர்வது மில்லை.
நித்தம் நித்தம் மாறும் மாற்றம் எத்தனையோ!
நெஞ்சில் நினைப்ப தெல்லாம்நிலைப்பதுதான் எத்தனையோ

நித்தம் நித்தம் மாறும் மாற்றம் எத்தனையோ!
நெஞ்சில் நினைப்ப தெல்லாம்
நிலைப்பதுதான் எத்தனையோ

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

மெட்டு:நித்தம் நித்தம் மாறுவது எத்தனையோ

No comments:

Post a Comment