காலந்திரும்பும்.
துடிக்க வைக்கிற பாவத்துக்கு
காலஞ் சொல்லுன்டா.
உழைச்சு உழைச்சு உனக்குப்
போட்ட கிழவங்கிழவி-நாளை
நீயும் படுத்தா நிலமை என்ன
நினைச்சுப் பாருடா.
பெத்த கடன் செஞ்சுனக்கு வாழ்வளிச்சாங்க.
பட்ட கடன் உனக்கிருக்கே நினைக்க வில்லையா?
கடன் பட்ட நெஞ்ச முனக்கு
கலங்க வில்லையா-உன்
கணக்குத் தீர்க்கப் பிள்ளை இருக்கு
காலந் திரும்புன்டா.
அரசாங்க விடுதிகளும் இருந்த காலன்டா
ஆனால் பணங் கட்டிப்
படிக்க வச்சாங்க பாமரங்கடா.
கூழுங் கஞ்சி குடிச்சி உன்னை
ஆளாக்கினாங்க--அந்த
வாழ வச்ச தெய்வங்களத்தான்
விடுதி சேத்துட்ட.
தெருவீதித் தெய்வங்களாத்
திரியறாங்கடா.
ஒருவேள சோத்துக்கு அலையுறாங்கடா.
பிள்ளை நீ வாழ்ந்து என்ன கொள்ளி வைக்கவா!--நீ
இல்லையின்னாலும் அரசாங்கம்
அள்ளிப் போடுன்டா.
கொ.பெ.பிச்சையா
No comments:
Post a Comment