வெளிநாடுச் சென்றுள்ள கணவனை எண்ணி மனைவியும் பிரிந்து ஏங்கும் கணவனும் பாடும் பிரிவுத்துயர் பரிவுப்பாடல்.
பெண்
பாட்டுக்குப்-பாட்டெடுத்து-நான்
பாடுவதுங்-கேட்கிறதா!
ஓடிவருங் கடலலையே தேடி அவரைச் சொல்வாயோ!
பாட்டுக்குப் பாட்டெடுத்து நான்
பாடுவதுங் கேட்கிறதா!
ஓடிவருங் கடலலையே தேடி
அவரைச் சொல்வாயோ!
ஆண்
இச்சைக்-கிளி- இங்கிருக்க-- ஹோய்
பச்சைக்கிளி--அஙகிருக்க.
திரும்பிச் செல்லும் கடலலையே
அவளை கண்டும் நீயும் சொல்வாயோ!
இச்சைக்-கிளி- இங்கிருக்க-- ஹோய்
பச்சைக்கிளி--அஙகிருக்க,
திரும்பிச் செல்லும் கடலலையே
அவளைக் கண்டும் நீயும் சொல்வாயோ!
பெண்
இளம்- மானின் -அழகாக,
இளந்-தளிர்க் -கொடியாக,
எங்கேயோக் கிடந்த என்னை,
தேடி வந்து கைபிடிச்சி,
ஆசையில்லா- எம்மனச-
அலையவிட்டாரே.
அலையவிட்ட மச்சானே,
ஊரைவிட்டுப் போனாரே,
ஊரைவிட்டுப் போனாரே, ஹோய்
ஊரைவிட்டுப்- போனாரே.
மன்னுயிரும் மயங்கையிலே, நான்
மடிவிரித்துச் சாய்கையிலே, ஹோய்
ஓலமிடும் அலைகடலே நீதான், உருண்டோடிச் சொல்லிவிடு.
ஆண்
குங்குமப் பொட்டு இட்டு, கூந்தலைக் குலையவிட்டு,
மின்னலாஞ் சிரிப்பழகில்,
என்னை நீ கட்டிப்போட்டு,
வழியனுப்ப வந்தவளே,
விழியொழுகிப் போனாளே!
பார்வைக்குப் பார்வை வச்சே
அவா
அப்புறந்தான் பேச வச்சா ஹோய்
ஓலமிடும் அலைகடலே நீ தான் உருண்டோடிச் சொல்லிவிடு
பெண்
மல்லிகப்பூச் சூடிஎன்னை, மனசு எல்லாம் மணணக்க வச்சி,
வள்ளி எந்தன் வாழ்க்கையிலே
வடிவேலா வந்தாரய்யா.
வந்த எங்கள் காதலிலே என்ன குறை நானும் வச்சேன்.
வனங்காத்த வள்ளி போல
தினமும் என்னை ஏங்க வச்சார்.
தினமும் என்னை ஏங்க வச்சார்.
ஹோய்
தினமும் என்னை ஏங்க வச்சார்.
ஆண்
அல்லிமலர் நீ யிருக்க இங்கே சந்திரன் நானிருக்க ஹோய்
சாட்சிச் சொல்லும் சூரியனே
நீ மறைந்து குளிர விடு.
இருவரும்
பாட்டுக்குப்-பாட்டெடுத்து-நான்
பாடுவதுங்-கேட்கிறதோ!
சாட்சிச் சொல்லும் சூரியனே
நீ மறைந்து குளிர விடு.
ஆண்
பாட்டுக்குப்-பாட்டெடுத்து-நான்
பாடுவதுங்-கேட்கிறதோ!
கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment