யார் மனிதன்?
மனிதனுக் கானப் பரிசு.
மனதை ஆள்பவன் மனிதனாகிறான்.
மனம்போல் வாழ்பவன் மிருகமாகிறான்.
மனந்தான் இறைவன் மனிதனில் உறைவன்.
கால்களின் போக்கில் கால்நடை வாழ்க்கை.
மனம்போன போக்கில்
மடையரின் மூர்க்கை.
மனந்தான் மனிதனின் அடையாளம்.
குணந்தான் அவனது நடைதாளம்.
சிந்தனைத் தற்புனை செயலுறும் கற்பனை
உந்தும் எண்ணம் உள்ளுறும் விதமே,
தந்தும் மூளை தான்செயும் பதமே.
முந்தும் நல்வினை முற்படும் இதமே.
சிந்திக்காச் செயலெதும் நிந்திக்கத் தான்படும்.
சொந்தம் பந்தங்களும் தந்துணைத் தவறிடும்.
தலைமைப் பண்புக்கும் நிலைமை மாறிடும்.
வெந்தணற் சூழ வினையெலாம் பாழ்படும்.
மனிதனாகப் பிறந்தாய் மனிதனாக வாழ்வாய்!
இனமாறி விலங்கின்
வனவாழ்வு ஏனோ!
சீச்சீ
இரைக்கும் பொலிக்கும்
அலைவதா வாழ்க்கை.
இறைவழி போற்றி
நிறைக வாழ்க!ஏற்றி!
கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment