என்னாச்சு ஏதாச்சு
என்னமோ ஆகிப்போச்சு.
கல்லெடுத்து எறியுறான், சொல்லெடுத்து வீசுறான்,
காரணம் என்னான்னா
யாரோ பேரச் சொல்லுறான்.
காந்தியைச் சுட்ட பாவம் கண்ணீரில் கரைகிறோம்.
விடுதலை பெற்றுத் தந்த
வீரர்களை மறந்து விட்டோம்
அடிமைத்தனம் ஆகி மீண்டும்
விரசியலில் அகப்பட்டோம்.
அரசியல் அழிஞ்சி போச்சு.
சுயமாகச் சிந்திக்காமல்
பயத்திலே வசப்பட்டோம்.
காமராசரைத் தோற்கடித்து
கர்மதோஷ பாவம் செய்தோம்.
தர்மம் அன்றே செத்துப் போச்சு
.
இலவசம் ஏங்கும் ஏழ்மை
ஏற்றத் தாழ்வு எனவறுமை.
பணத் தாதிக்க அதிகாரம்:
ஜனநாயகம் கொலை யாச்சு
சுதந்திரம் விலை யாச்சு
பெண் பிறந்த சாபமோ!
வன்புணர்ப் பாவமோ!
சின்னஞ் சிறுப் பிஞ்சுகள்
சிதைக்கப் படும் வன்மங்கள்
தன்னெஞ்சம் நஞ்சாச்சு
சட்டங்கள் கடுமை ஆக்க,
குற்றங்கள் கொடுமை தீரக்க;
தண்டனை அச்சம் ஊட்ட
கண்டனம் உச்சம் தொடும்.
கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment