Monday, 31 March 2025

ஆனைமுகன்

ஆனை முகனே அருள் செய் ஐங்கரனே

ஆனைமுகனே அருள் செய் ஐங்கரனே!
தானைத் தலைவனே தர்மத்தின் காவலனே!
வினை தீர்க்கும் கண நாதா! 
எனை மீட்பாய் குணநாதா!

அறிவின் திருவே அமைதியின் உருவே.
உறவின் தருவே உதவும் பெருவே.
தொழிலின் குருவே தொடரும் வரவே.
பொழிவாய் அருளே புகழின் பொருளே.

ஆணை முகனே அன்பின் அழகே.
பானை வயிறோன் பண்பின் பழமே.
ஏழையின் இனனே எலியின் வாகனனே.
ஊழை விரட்டும் வினைமுன் காவலனே.

உலகே சொந்தம் உனக்குள்ள பந்தம்.
பழகிட என்றும் சனியுன்னை அஞ்சும்.
விலகும் தோஷங்கள் விநாயகா என்றால்.
துலங்கும் நேசங்கள் கணபதி கண்டால்.

வாஸ்தும் பொய்யாகும் வாசல் நீயிருந்தால்
ஆஸ்தி கைய்யாகும் ஆனைமுகன் நீதெரிந்தால்.
சந்திப்பு இடமெங்கும் சந்திப்பாய் நீ உறைந்தால்.

முந்தி முன்னிற்கும் நல்வினைநீ ஆனணையிட்டால்.

ஞானத் திருமுகமே மோனப்பெரும் பொருளே
தானம் தருமருளே தீனமழி ஐங்கரனே.
பேணும் பெருமானே வேணுமுன் கருணையே
நானும் அருகாவேன் பூணுமணி பொற்சரமே!.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment