பெண்ணினங் காப்போம்!
பத்திர காளியாய் எழுகிறாள்.
உக்கிர மாரியாய் விரைகிறாள்.
எத்திசை எங்கே அக்கிரமம் அங்கே.
திகெட்டுஞ் சூலை சுழற்றியே ஆங்கே!
எழுகிறாள்! எழுகிறாள்!
புதுமைப்பெண எழுகிறாள்!
வருகிறாள்!வருகிறாள்!
வலிமையாகி வருகிறாள்!
உறுதி பெற்று வீரகாளி
உருவ முடன் எழுகிறாள்!
இறுதி மூச்சு உள்ளவரை
எதிர்த்திடவே வருகிறாள்!
விழிகளிலே நெருப்புடனே
வேகமாகி எழுகிறாள்!
ஆர்பபரிக்கும் இடிகளாகி
போர்ப் படையாய் வருகிறாள்!
எரிமலையாய் சீற்றமுடன்
எரித்திடவே எழுகிறாள்!
கொந்தளித்துச் சுனாமியாய்
கோபமாகி வருகிறாள்!
பூவுக் குள்ளே இப்படியும்
பூகம்பம் வெடிக்குமோ!
மென்மையும் வன்மையாகி
இன்மைகளை முடிக்குமோ!
பொறுக்காது பெண்மையினி!
புறப்பட்டாள் சூலியாய்!
கொடுமைக்குக் கொடுமையாய்
கொடுவாளாய் பாய்கிறாள்!.
பசுவுந்தான் குத்திக் கொல்லும்....
பாது காக்கத் தன்னையே!
பசுவதிகள் பெண்களடா!
பத்தரகாளி அம்சமடா!
ஆண்மையே வன்மங்களோ!
காமக்களிப் பேய்களோ!
பெண்களென்னப் பதுமைகளோ!
பிய்த்து விளையாடுதற்கோ!
வந்த வழிச் சிதைப்பாயோ!
வதைப் படு பாவி நீசா!
எந்த வழி இனித் திறக்கும்?
இதைக் கணிக்கத் தெளிவில்லையோ!
மனித உடல் விலங்குகளை
மன்ற மேற விடலாமோ!
புனிதமான காமங் கொன்ற
புலையர் களைத் தீண்டலாமோ!
பட்டவள் சொன்னப் பின்னும்
அட்டவற்கு வாழ் வெதற்கு?
பட்டமரந் தொங்க இன்னும்
துட்டற்குக் காலம் எதற்கு!
பயங் கலைந்தும் போனதோ!
நயந் தொலைந்தக் கானிதோ!!
காவல் மங்கித் தோற்றதோ
ஏவற் கங்கும் நீற்றதோ!
மன் னுயிர்ப் பெண்ணினம்,
இன் னுயிற் கண்ணினம்;
வன் மங்களின் ஆடுபொருளோ!
பின் தங்கும் தேடுபொருளோ!
பெண்மை என்ன ஆசைக் கருவியோ!
இன்பம் அனுபவித்து வீசும் பொருளோ!
மன்னுலகின் உயிரென்ற றிவிலையோ!
என்ன விலை கொடுத்தேனும் பெண்ணினங் காப்போம்!
கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment